கயாவில் உள்ள விஷ்ணுபாத் கோயிலுக்குச் சென்ற தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முகமது இஸ்ரேல் மன்சூரி மீது பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.
முசாபர்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர கிஷோர் பராஷர், “இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்தியதற்காக” அமைச்சர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார்.
“சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே விஷ்ணுபாத் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதால், அமைச்சர் இஸ்லாமியர் என்பதால் விஷ்ணுபாத் கோயிலுக்குச் செல்லக்கூடாது என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.
பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்தது மனித குலத்திற்கே அவமானம் – பாஜக உறுப்பினர் குஷ்பூ
இந்த வழக்கை வருகின்ற செப்டம்பர் 2ஆம் தேதி நீதிமன்றம் விசாரிக்கும்” என்று கிஷோர் பராஷரின் வழக்கறிஞர் ரவீந்திர குமார் சிங் தெரிவித்துள்ளார்.
பாஸ்மாண்டா இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மன்சூரி, இந்த வார தொடக்கத்தில் முதல்வர் நிதிஷ் குமாருடன் கயாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார், அப்போது அவர்கள் விஷ்ணுபாத் கோவிலில் பிரார்த்தனை செய்தனர்.
கோவில் வளாகத்தில், “சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள்” என்ற அறிவிப்புப் பலகையை மேற்கோள் காட்டி, பாஜக தலைவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மன்சூரி கோயிலுக்குச் சென்றது தொடர்பான சர்ச்சை குறித்து முதல்வர் நிதிஷ் குமார் வருத்தம் தெரிவித்துள்ளார், மேலும் பாஜகவின் “பிரிவினை” அரசியலே சர்ச்சைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
Kallakurichi Sakthi School unconditional Fight for bail | Ravikumar | Shanthi | Deva’s Update 14
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.