Aran Sei

திரைப்படங்களை தடை செய்வது, பத்திரிகையாளர்களை கைது செய்வது என கொடுங்கோல் ஆட்சியின் அறிகுறிகள் பாஜக ஆட்சியில் காணப்படுகின்றன – திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி குற்றசாட்டு

திரைப்படங்களை தடை செய்வது, பத்திரிகையாளர்களை கைது செய்வது, உண்மை பேசியதற்காக சாமானியர்களை தண்டிப்பது என கொடுங்கோல் ஆட்சியின் அறிகுறிகள் பாஜக ஆட்சியில் காணப்படுகின்றன. சுதந்திரத்துக்கு பாஜக உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது என்று திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நுஸ்ரத் ஜகான் குற்றம் சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. அந்நிகழ்வில் நேற்று (டிசம்பர் 16) முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னிலையில் பேசிய இந்தி நடிகர் அமிதாப்பச்சன், கருத்துச் சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது என்று கூறியுள்ளார்.

மோர்பி பாலம் விபத்து: குஜராத்திற்கு பிரதமர் மோடி வருவதை ஒட்டி அவரது சொந்த மாநிலத்திலேயே Go Back Modi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது

அதே மேடையில், பின்னணி பாடகர் அரிஜித் சிங்கை பாடுமாறு மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டார். அதற்கு அரிஜித் சிங், ‘நிறம் காவியாக இருக்கும்’ என்ற பாடலை பாடினார்.

இந்த நிகழ்வுகளை முன்வைத்து பாஜகவிற்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே ‘ட்விட்டர்’ பக்கத்தில் வார்த்தை மோதல் வெடித்துள்ளது.

அமிதாப்பச்சனின் வார்த்தைகள், கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை மேடையில் வைத்துக்கொண்டு பேசியவை என்பதால், அவை மிகவும் தீர்க்கதரிசனமாக இருக்கும். பெண் கொடுங்கோலரின் முன்பு கண்ணாடியை காட்டியதுபோல் இருக்கிறது. மேற்கு வங்கத்தின் எதிர்காலம் காவி என்பதை மம்தாவுக்கு நினைவுபடுத்தி உள்ளனர் என்று பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

பொய்யான வாக்குறுதிகளை அளித்து குறுக்கு வழியில் முன்னேற துடிக்கும் அரசியல்வாதிகள் நாட்டின் மிக பெரும் எதிரிகள்: பிரதமர் மோடி பேச்சு

இதற்கு பதிலடி கொடுத்த திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். நுஸ்ரத் ஜகான், “திரைப்படங்களை தடை செய்வது, பத்திரிகையாளர்களை கைது செய்வது, உண்மை பேசியதற்காக சாமானியர்களை தண்டிப்பது என கொடுங்கோல் ஆட்சியின் அறிகுறிகள் பாஜக ஆட்சியில் காணப்படுகின்றன. சுதந்திரத்துக்கு பா.ஜனதா உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. ஆனால், அமித் மாளவியா மற்றவர்களை குற்றம் சாட்டுகிறார் என்று கூறியுள்ளார்.

தீபிகா படுகோனின் காவி பிகினிக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரிஜு தத்தா, ஒன்றிய அரசின் அமைச்சர் ஸ்மிரிதி இராணி காவி உடையில் ‘பெமினா மிஸ் இந்தியா’ போட்டியில் பங்கேற்ற பழைய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Source : NDTV

Baba Roast | Tamils denied RSS agenda of Rajinikanth Baba Failed Miserably | Movie Review |

திரைப்படங்களை தடை செய்வது, பத்திரிகையாளர்களை கைது செய்வது என கொடுங்கோல் ஆட்சியின் அறிகுறிகள் பாஜக ஆட்சியில் காணப்படுகின்றன – திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி குற்றசாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்