Aran Sei

கர்நாடகாவில் குங்குமம் இட்டிருந்த மாணவருக்கு கல்லூரியில் அனுமதி மறுப்பு – பஜ்ரங் தள், ஸ்ரீராம் சேனா போராட்டம்

ர்நாடகாவில் நெற்றியில் குங்குமம் இட்டிருந்த மாணவரை வகுப்பறையில் அனுமதிக்காமல் திருப்பிய அனுப்பப்பட்ட மாணவருக்கு ஆதரவாக பஜ்ரங் தளம், ஸ்ரீராம் சேனா அமைப்பினர் போராட்டம் நட்த்தியுள்ளனர்.

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட‌ தடைக்கு எதிரான வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம், ‘‘மத ரீதியான அடையாளங்களை அணியக் கூடாது” என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கர்நாடக கல்வித்துறை, ‘‘மத ரீதியான உடைகளை அணிந்து வருவோரை வகுப்புக்குள் அனுமதிக்க கூடாது”என சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.

சிறுபான்மை நிறுவனங்களிலும் ஹிஜாப் அணிய தடை – கர்நாடக அரசின் உத்தரவை திரும்பப் பெற காங்கிரஸ் வலியுறுத்தல்

இதையடுத்து ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஹிஜாப் அணிய தடை விதித்ததால் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் தன்னுடைய பணியை ராஜினாமா செய்துள்ளார்.   இந்நிலையில் விஜயபுராவில் அரசு பி.யு.கல்லூரியில் நெற்றியில் குங்குமம் இட்டுக்கொண்டு வந்த மாணவரை கல்லூரி நிர்வாகம் வகுப்பறையில் நுழைய அனுமதி மறுத்துள்ளது. இதனால் கோபமடைந்த அந்த மாணவர் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பஜ்ரங் தளம்,  ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் கல்லூரி வாயிலில் போராட்டம் நடத்தியுள்ளனர். வரும் 23ம் தேதிவரை கல்லூரிகளுக்கு அருகில்போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், காவல்துறையினர்  அவர்களை கைது செய்துள்ளனர்.

ஹிஜாப் அணிந்து போராடிய மாணவிகள் மேல் வழக்குப் பதிவு -144 உத்தரவை மீறியதாக குற்றச்சாட்டு

ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறுகையில், ‘‘குங்குமம் இடுவது மத நம்பிக்கை அல்ல. இந்திய கலாச்சாரத்தின் அடையாளம். மாணவரை வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுத்த ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும். குங்குமம், விபூதி ஆகியவற்றை அணிந்து வரும் இந்து மாணவர்களை வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்கும் வரை போராட்டம் தொடரும்”என்று தெரிவித்துள்ளார்.

Source: indianexpress

கர்நாடகாவில் குங்குமம் இட்டிருந்த மாணவருக்கு கல்லூரியில் அனுமதி மறுப்பு – பஜ்ரங் தள், ஸ்ரீராம் சேனா போராட்டம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்