Aran Sei

ஆணவப் போக்கு கட்சித் தலைவருக்கு அழகல்ல – பாஜக அண்ணாலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

டகங்களை தொடர்ந்து இழிவுப்படுத்தும் பாஜக மாநிலத்தலைவர்  அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நாவடக்கம் அவசியமானது என அவருக்கு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சென்னைப் பத்திரிகையாளர் மன்றம், ‘27-05-2022 மாலை சென்னையில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறார் பாஜக தமிழ்நாடு தலைவர் திரு.அண்ணாமலை. ஊடகவியலாளர் ஒருவரின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தன் நிதானத்தை இழந்த அண்ணாமலை அவர்கள், கேள்வி கேட்டவரைப் பார்த்து அறிவாலயத்தில் இருந்து 200 ரூபாய் கிடைத்துவிடும் என்று ஆரம்பித்து திடீர் ஏலதாரராய் மாறிப் போய்க் கொண்டே 3000 ரூபாய் என்று அவதூறான  வகையில் பேசியிருக்கிறார்.

உத்தரகாண்ட்: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்த பாஜக மாநில அரசு

ஊடகவியலாளர் கேள்வியை எதிர்கொள்ள முடியாவிட்டால் அமைதி காக்கலாம். மாறாக ஊடகவியலாளர்கள், தங்களுடைய கடமைகளை செய்ய அறிவாலயத்தில் கையூட்டு பெறுகிறார்கள் என்று அவலமான அவதூறு செய்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த ஆணவப் போக்கு ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. மேலும் தனது அவதூறான பேச்சை இதுதான் தர்மம் என நியாயப்படுத்தும் பேச்சு இன்னும் கொடுமை.

தெலங்கானா: இஸ்லாமிய இளைஞரை காதல் திருமணம் செய்த இந்து பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக ஆணவ படுகொலை செய்யப்பட்டார்.

இது போன்ற பேச்சுக்களை திரு. அண்ணாமலை தொடர்ந்து பேசி வருவது ஊடகங்களின் உரிமையை உணர்வுகளை உரசிப்பார்க்கும் போக்கு. இந்த போக்கை கைவிட்டு நாவடக்கத்துடன் நயத்தகு நாகரீக அரசியலை அண்ணாமலை கற்றுக் கொள்ள வேண்டும்.

கர்நாடகா: பசவண்ணா கோயில் தர்காவாக மாற்றப்பட்டுள்ளது – விஷ்வ இந்து பரிஷத் குற்றச்சாட்டு

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு என்ற திருக்குறளை தமிழக பாஜக தலைவர் தொடர்ந்து படிக்கவும் வலியுறுத்துகிறோம். தர்மத்தை உணர திருக்குறள் துணை நிற்கும்.’ என்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச்செயலர் பாரதிதமிழன் கூறியுள்ளார்.

சம்பவம் செய்த Stalin அலறித்துடிக்கும் Annamalai

ஆணவப் போக்கு கட்சித் தலைவருக்கு அழகல்ல – பாஜக அண்ணாலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்