கர்நாடகாவில் 10 வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனர் கேசவ் பாலிராம் ஹெட்கேவரின் உரை சேர்க்கப்பட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, “ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பூர்வீக இந்தியர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பூர்வீக இந்தியர்களா, ஆரியர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்களா? இல்லை அவர்கள் திராவிடர்களா? நாம் நமது வேர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்வில் பங்கேரு உரையாற்றிய சித்தராமையா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கர்நாடகா பாடப்புத்தகத்தில் பெரியார், பகத்சிங், நாராயண குரு குறித்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
Source : india today
வெளுத்து கட்டிய ஸ்டாலின் I VCK Vikraman Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.