உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு விளையாட்டுத் துறையை வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணிய சுவாமி கிண்டல் செய்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தினம் ஒரு காஷ்மீரி பண்டிட் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இதற்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டியது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
Since there is President's Rule in J&K , and yet daily a Kashmiri Hindu is being shot dead, it has become necessary ask for Amit Shah's resignation. He can be instead given Sports Ministry since nowadays cricket is receiving undue interest.
— Subramanian Swamy (@Swamy39) June 2, 2022
“இல்லையென்றால், அவர் கிரிக்கெட் மீது அவருக்குத் தேவையற்ற ஆர்வம் இருப்பதால், அவருக்கு விளையாட்டுத் துறையை வழங்கலாம்” என்று கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.