அக்னிபத் திட்டம் நாட்டின் எதிர்காலத்திற்கு அபாயத்தை ஏற்படுத்தும் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்
ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அக்னிபத் திட்டத்தின்படி ராணுவத்தில் 17.5 முதல் 21 வயதுள்ள 45 ஆயிரம் பேர், 4 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளனர். இதன்மூலம் இளைஞர்களுக்கு பணிபுரிய வாய்ப்பு கிடைப்பதோடு, ஆயுதப்படை இளம் வீரர்கள் படையாகும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதற்கான ஆட்கள் தேர்வு அடுத்த 90 நாட்ள்களில் ஆன்லைன் முறையில் நடக்கவுள்ளது. இதில் தேர்வாகும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள். ஆயுதப்படைக்கு வழக்கமாக ஆட்கள் தேர்வு செய்வதற்கான கல்வி தகுதியே, அக்னிவீரர்களுக்கும் பொருந்தும். அதன்படி, புதிய தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மட்டங்களில் பயிற்சி வழங்கப்படும். பல்வேறு துறைகளில், புதிய திறன்களுடன் வேலைவாய்ப்புகளை இந்த திட்டம் உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பர். இதற்காக மாத சம்பளம் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரத்துடன் படிகளும் வழங்கப்படும். மருத்துவ மற்றும் காப்பீடு வசதிகளும் வழங்கப்படும்.
ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தால் வேலையின்மை அதிகரிக்கும் – பாஜக எம்.பி வருண் காந்தி குற்றச்சாட்டு
4 ஆண்டுகளுக்குப் பின்னர், 25 சதவீத வீரர்களுக்குப் பணி நீட்டிக்கப்பட்டு, ஆயுதப்படைகளில் 15 ஆண்டுக்காலம் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். ஆயுதப்படையில் சேர முடியாதவர்களுக்கு 11 லட்சம் முதல் 12 லட்சம் வரை நிதி வழங்கப்படும். ஆனால், அவர்கள் ஓய்வூதிய பலன்கள் பெற முடியாது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ராணுவத்தின் செலவு குறையும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.
அக்னிபத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், “நாட்டின் பாதுகாப்பு என்பது குறுகிய கால பிரச்சினையோ முறைசாரா பிரச்சினையோ அல்ல. பாதுகாப்புக்கு தொலைநோக்கு திட்டம்தான் தேவை. இராணுவ ஆட்சேர்ப்பு தொடர்பாக பின்பற்றப்படும் அலட்சிய அணுகுமுறை, இராணுவத்தின் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல இளைஞர்களின் எதிர்காலத்திற்கும் ஆபத்தாக முடியும் என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைமையகத்திற்குள் அத்துமீறி நுழைந்த டெல்லி காவல்துறை – ப. சிதம்பரம் குற்றச்சாட்டு
“(அக்னிபத் சே பாத் பெர் அக்னி நா ஹோ) ‘அக்னிபத்’ பாதையை தீயில் வைக்கக்கூடாது,” என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
source: Thenewindianexpress
பாஜகவின் கலவரபுத்தி எப்பவுமே மாறாது Dr sharmila Interview | Nupur Sharma on Prophet Muhammad
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.