Aran Sei

அக்னிபத் விவகாரம்: நாட்டின் இளைஞர்களுக்கு பிரதமர் மோடி துரோகம் இழைக்கிறார் – ஆம்ஆத்மி குற்றச்சாட்டு

யுதப் படைகளில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான ‘அக்னிபத்’ திட்டத்தை அறிவித்ததன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இந்திய இளைஞர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும்,  அந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளது.

இளைஞர்கள் விழித்தெழுந்து ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிராக ஜனநாயக முறையில் குரல் எழுப்ப வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் அறிவுறுத்தியுள்ளார்.

பீகார்: அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு – ஒன்றிய அரசுக்கு எதிராக போராடும் இளைஞர்கள்

ராணுவ ஆட்சேர்ப்புக்கான அக்னிபாத் திட்டம், நாட்டில் உள்ள 20 கோடி இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி செய்யும் தெளிவான துரோகம். இளைஞர்களின் முதுகில் அரசாங்கம் குத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். விழித்து உங்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். ஜனநாயகத்தில் ஜனநாயக முறையில் குரல் எழுப்ப உங்களுக்கு உரிமை உள்ளது. உங்கள் உரிமைகளைப் பெற குரல் எழுப்புங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

ஒர் ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு (மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக) விவசாயிகளுக்கு முன் ஒன்றிய அரசு தலை குனிந்தது போல் உங்கள் முன் குனிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பீகார்: ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு – பாஜக எம்.எல்.ஏ மீது தாக்குதல்

முன்னதாக,  ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அக்னிபாத் திட்டத்தின்படி ராணுவத்தில் 17.5 முதல் 21 வயதுள்ள 45 ஆயிரம் பேர், 4 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளனர். இதன்மூலம் இளைஞர்களுக்கு பணிபுரிய வாய்ப்பு கிடைப்பதோடு, ஆயுதப்படை இளம் வீரர்கள் படையாகும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதற்கான ஆட்கள் தேர்வு அடுத்த 90 நாட்ள்களில் ஆன்லைன் முறையில் நடக்கவுள்ளது. இதில் தேர்வாகும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள். ஆயுதப்படைக்கு வழக்கமாக ஆட்கள் தேர்வு செய்வதற்கான கல்வி தகுதியே, அக்னிவீரர்களுக்கும் பொருந்தும். அதன்படி, புதிய தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மட்டங்களில் பயிற்சி வழங்கப்படும். பல்வேறு துறைகளில், புதிய திறன்களுடன் வேலைவாய்ப்புகளை இந்த திட்டம் உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பர். இதற்காக மாத சம்பளம் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரத்துடன் படிகளும் வழங்கப்படும். மருத்துவ மற்றும் காப்பீடு வசதிகளும் வழங்கப்படும்.

எதிரிகளை அழிப்பதற்காக ஹிட்லர் கட்டிய நச்சு வாயு அறைகளை மட்டும் தான் ஒன்றிய அரசு இன்னும் கட்டவில்லை: சிவசேனா விமர்சனம்

4 ஆண்டுகளுக்குப் பின்னர், 25 சதவீத வீரர்களுக்குப் பணி நீட்டிக்கப்பட்டு, ஆயுதப்படைகளில் 15 ஆண்டுக்காலம் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். ஆயுதப்படையில் சேர முடியாதவர்களுக்கு 11 லட்சம் முதல் 12 லட்சம் வரை நிதி வழங்கப்படும். ஆனால், அவர்கள் ஓய்வூதிய பலன்கள் பெற முடியாது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ராணுவத்தின் செலவு குறையும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.

Source: ndtv

பாஜகவின் கலவரபுத்தி எப்பவுமே மாறாது Dr Sharmila Interview

அக்னிபத் விவகாரம்: நாட்டின் இளைஞர்களுக்கு பிரதமர் மோடி துரோகம் இழைக்கிறார் – ஆம்ஆத்மி குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்