இந்தியாவில் வறுமை, பருவநிலையால் 22 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவதாக சேவ் தி சில்ட்ரன் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
‘சேவ் தி சில்ட்ரன்’ என்ற குழந்தைகள் உரிமை அமைப்பும், பிரசல்ஸ் நகரில் உள்ள விரிஜே பல்கலைக்கழகமும் இணைந்து குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளன.
அதில், உலகம் முழுவதும் 77 கோடியே 40 லட்சம் குழந்தைகள், வறுமையாலும், பருவநிலை நிகழ்வுகளாலும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்டது பெண் குழந்தைகள்தான் – சேவ் தி சில்ட்ரன் ஆய்வில் தகவல்
உலக அளவில், கம்போடியாவில் வசிக்கும் குழந்தைகள்தான் வறுமை, பருவநிலை தாக்கம் என இரட்டை அச்சுறுத்தலைச் சந்திப்பவர்களில் முதலிடத்தில் உள்ளனர். அங்கு 72 விழுக்காடு குழந்தைகளும், மியான்மரில் 64 விழுக்காடு குழந்தைகளும், ஆப்கானிஸ்தானில் 57 விழுக்காடு குழந்தைகளும் இந்த இரட்டை அச்சுறுத்தலை சந்தித்து வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 51 விழுக்காடு பேர், அதாவது 22 கோடியே 20 லட்சம் குழந்தைகள், வறுமையிலும், பருவநிலை நிகழ்வுகளின் பிடியிலும் வாழ்ந்து வருகிறார்கள். இந்தியாவில், 35 கோடியே 19 லட்சம் குழந்தைகள், ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு பருவநிலை நிகழ்வால் பாதிக்கப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
கேரளா, அசாம் போன்ற மாநிலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கும், ஒடிசாவில் வீசும் புயலும் எண்ணற்ற குழந்தைகளை வறுமையில் தள்ளி இருப்பதாக கூறியுள்ளது. உயர் வருவாய் நாடுகளிலும் 12 கோடியே 10 லட்சம் குழந்தைகள் இந்த அச்சுறுத்தலில் வாழ்ந்து வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Source : the hindu
ரூபாய் நோட்டில் பிள்ளையார் படம் | நிம்மியை முந்திய காவி கெஜ்ரிவால் | Aransei Roast | BJP | AAP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.