Aran Sei

இந்தியாவில் கடந்த 9 மாதங்களில் 11,300 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் – கடந்தாண்டு 1,780 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன

இந்தியாவில் கடந்த 9 மாதங்களில் 11,300 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று மும்பை போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்திக் குறிப்பில், போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 58 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டில் போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட அவற்றுடன் தொடர்புடைய மொத்தம் 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

குஜராத் துறைமுகம் வழியாக வரும் போதைப்பொருட்கள் பற்றி விசாரணை செய்ய வேண்டும் – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை

கொரோனா தொற்றுநோய் பாதிப்புக்கு பின்னர், பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கையில் மக்கள் பாடுபட்டு வரும் சூழலில் இதுபோன்ற சட்டவிரோத செயல்களின் வளர்ச்சியும், பயன்பாடும் மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் 1,780 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, 240 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். 119 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்தாண்டு மிக அதிகளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று மும்பை போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், பஞ்சாப் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களிலிருந்து போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

பாஜகவுக்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்துவேன்’ – நவாப் மாலிக்

இவற்றில் கோக்கைன், மெபிடிரோன், கஞ்சா மற்றும் எல்.எஸ்.டி. வகை போதைப்பொருட்கள் அதிக அளவில் கைப்பற்றப்பட்டு உள்ளன. எனினும், இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு விவரங்கள் எதனையும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடவில்லை.

‘பிளாக் கோகோயின்’ என்பது சந்தையில் அதிக தேவை உள்ள போதைப்பொருள் ஆகும். இது ஒரு கிராமுக்கு ரூ.20,000 வரை விற்கப்படுகிறது, இது மிகவும் விலையுயர்ந்த போதைப் பொருளாகும் என்று போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி தெரிவிதித்துள்ளார்.

Source : NDTV

பேட்டியும் கிடையாது ஒன்னும் கிடையாது | நா*சேகராக மாறிய H. Raja | Aransei Roast | BJP | DMK

இந்தியாவில் கடந்த 9 மாதங்களில் 11,300 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் – கடந்தாண்டு 1,780 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்